பிரேத பரிசோதனை உடலை தைக்காமல் கொடுத்ததால் பரபரப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை ரயில் நிலையம் அருகே கடந்த 21 ஆம் தேதி அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார்.

Update: 2018-09-26 05:26 GMT
* திருச்சி மாவட்டம் மணப்பாறை ரயில் நிலையம் அருகே கடந்த 21 ஆம் தேதி அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார். அவரது உடலை ரயில்வே போலீசார் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  5 நாட்கள் ஆகியும் யாரும் வராததால் இறந்தவரின் உடல், பிரேத பரிசோதனைக்குப்பின்  ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

* உடலை  தகன மேடைக்கு அடக்கம் செய்ய கொண்டு சென்றனர். அப்போது உடல்பாகங்கள் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.. அப்போது அங்கிருந்த பணியாளர்கள் உடலில் பிளாஸ்டிக் பை எதுவும் சுற்றப்பட்டுள்ளதா என்று பார்க்கும் போது உடல் தைக்கப்படாமல் இருப்பது  கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்