ரயில் மின்பாதை வயர் அறுந்து விழுந்தது...

கோவில்பட்டி அருகே ரயில் பாதையில் மின் வயர் அறுந்து விழுந்ததால், சென்னைக்கு வரும் தென்மாவட்ட ரயில்கள் தாமதமாக வரும் என்று கூறப்படுகிறது.

Update: 2018-09-11 07:35 GMT
* தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சாத்தூர் இடையே நேற்றிரவு ரயில் பாதையில் மின்வயர் அறுந்து விழுந்தது. இதனால் அவ்வழியாக இயக்கப்படும்  மும்பை ரயில், கவுகாத்தி செல்லும் ரயில் ஆகியவை, கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

* இதேபோல், தூத்துக்குடியில் இருந்து மைசூர் செல்லும் ரயில், குமாரபுரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர். இதையடுத்து, ரயில் பாதை சீரமைக்கும் பணி நள்ளிரவு ஒன்றரை மணிக்கு முடிந்ததை அடுத்து, ரயில்கள் ஒவ்வொன்றாக புறப்பட்டுச் சென்றன.

* இதனால் சென்னைக்கு வரவேண்டிய அனந்தபுரி, கன்னியாகுமரி, நெல்லை, முத்துநகர், செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் காலதாமதாக வரும் என்று கூறப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்