சேலம் தனியார் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து - நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்...

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், ஏசி மெஷினில் திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது.

Update: 2018-09-10 19:12 GMT
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், ஏசி மெஷினில் திடீரென தீப்பிடித்து  விபத்து ஏற்பட்டது. இதனால் மருத்துவர்களும், நோயாளிகளும் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். புகை மூட்டம் அதிகமாக இருந்ததால் நோயாளிகள், ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மற்ற மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்