தமிழகம் முழுவதும் நடைபெற்ற லோக் அதாலத் : முடிவுக்கு வந்த 75,000 வழக்குகள்...

தமிழகம் முழுவதும் நடந்த லோக் அதாலத்தில், சுமார், 179 கோடி ரூபாய் மதிப்பிலான 75 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.

Update: 2018-09-09 07:33 GMT
தமிழகம் முழுவதும் நடந்த லோக் அதாலத்தில், சுமார், 179 கோடி ரூபாய் மதிப்பிலான 75 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. சென்னை உயர் நீதிமன்றத்தில் 10 அமர்வுகள் மதுரை கிளையில் 6 அமர்வுகள் என மாவட்ட நீதிமன்றம் உட்பட தமிழகம் முழுவதும் 447 அமர்வுகளில் காசோலை மோசடி வழக்குகள், தொழிலாளர் பிரச்சனை தொடர்பான வழக்குகள், சிவில் வழக்குகள் உள்ளிட்ட 2 லட்சத்து 8 ஆயிரத்து 916 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் சுமார் 179 கோடி ரூபாய் மதிப்பிலான, வழக்குகள்  தீர்வு காணப்பட்டதாக தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு தெரிவித்துள்ளது
Tags:    

மேலும் செய்திகள்