மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைக்காததால் - விரக்தியடைந்த மாணவி தற்கொலை

மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைக்காததால் விரக்தியடைந்த சென்னையை சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-09-07 19:01 GMT
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள சேலையூரை  சேர்ந்தவர் எட்வர்டு. இவரின் மகள் ஸ்ருதி 2 முறை நீட் தேர்வு எழுதியும் மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. தனியார் மருத்துவ கல்லூரியில் அதிக பணம் கட்டி சேர முடியாததால் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் மருத்துவ படிப்பில் சேர முடியாத சோகத்தில் இருந்த ஸ்ருதி, பிளாஸ்டிக் கவரால் முகத்தை மூடி செல்போன் சார்ஜர் ஒயரைக் கொண்டு கழுத்தை இறுக்கி தற்கொலை செய்து கொண்டார். உயிரிழந்த மாணவியின் சடலத்தை மீட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

Tags:    

மேலும் செய்திகள்