டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு முறைகேடு வழக்கு : விசாரணை அறிக்கை நாளை மறுநாள் தாக்கல்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் இடைக்கால அறிக்கையை நாளை மறுநாள் தாக்கல் செய்வதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

Update: 2018-09-03 13:48 GMT
கடந்த 2015 ஆம் ஆண்டு, நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை, இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த, நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் அடங்கிய அமர்வு, டிஎன்பிஎஸ்சி விடைத்தாள் முறைகேடு நடந்துள்ளதற்கு முகாந்திரம் உள்ளதா என கேள்வி எழுப்பினர். இதையடுத்து மோசடி நடந்துள்ளதற்கு முகாந்திரம் உள்ளதால் தான் டிஎன்பிஸ்சி அதிகாரிகள் 4 பேரை கைது செய்துள்ளதாக மத்திய குற்றப் பிரிவு போலீசார் தரப்பில் ஆஜரான அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும், வழக்கு விசாரணையின் நிலை குறித்து, இடைக்கால அறிக்கையை நாளை மறுநாள் தாக்கல் செய்யப் போவதாகவும் கூறினார். இதையடுத்து, வழக்கின் அடுத்த விசாரணையை நாளை மறுதினத்துக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்