சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்து மோசடி : இடைத்தரகர் கைது

சென்னையில் சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்து மோசடியில் ஈடுபட்ட வழக்கில் இடைத்தரகரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 16 கார்களை மீட்டுள்ளனர்.

Update: 2018-09-02 07:45 GMT
சென்னை நெசப்பாக்கம் பகுதியை சேர்ந்த டி.வி. நடிகை அனிஷா என்கிற பூர்ணிமா, மற்றும் ஹரிக்குமார் உள்பட 3 பேர் சொகுசு கார்களை வாடகைக்கு இயக்கி வந்துள்ளனர். இவர்களின் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ரமேஷ் என்பவர் நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் கார்களின் ஆவணங்களை வைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக கார் உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் ரமேஷ் கைது செய்யப்பட்டார். காரை விற்றுக் கொடுத்த இடைத்தரகர் பாண்டியனையும் கைது செய்த போலீசார் அவர் கொடுத்த தகவலின் பேரில் 16 கார்களை மீட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்