மேம்பால தடுப்பு சுவர் மீது மோதிய பைக் - மாணவர் பலி

விபத்துக்குள்ளான பைக்கை போலீசார் சோதனை செய்த போது, அதில் கால்கிலோ கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

Update: 2018-08-31 13:25 GMT
* சென்னையில் குரோம்பேட்டை எம்.ஐ.டி மேம்பாலத்தின் மீது, அதிவேகமாக வந்த பைக் ஒன்று தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

* இந்த விபத்தில், கல்லூரி மாணவர் விஜய் என்பவர், 40 அடி உயரத்திலிருந்து தூக்கி வீசப்பட்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

* உடன் வந்த நண்பர் மதிவாணன், சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.  இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மாணவர் விஜய் உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

* விபத்துக்குள்ளான பைக்கை போலீசார் சோதனை செய்த போது, அதில் கால்கிலோ கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்