தாய் குரங்கு கண்முன்னே மின்சாரம் தாக்கி உயிரிழந்த குட்டி குரங்கு

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் ஒத்தவாடை தெருவில் டிரான்ஸ்பார்மரில் விளையாடிய குட்டி குரங்கு மின்சாரம் தாக்கி உயிரிழந்த‌து.

Update: 2018-08-31 08:17 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் ஒத்தவாடை தெருவில் டிரான்ஸ்பார்மரில் விளையாடிய குட்டி குரங்கு மின்சாரம் தாக்கி உயிரிழந்த‌து. அங்குள்ள டிரான்ஸ்பார்ம‌ர்,  மழையால் ஈரமாக இருக்க, ஆபத்தை உணராமல், குரங்குகள் கூட்டம் கூட்டமாக அங்கும் இங்கும் தாவி குதித்து விளையாடியுள்ளன. 

அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில் குட்டி குரங்கு தூக்கி வீசப்பட்டது. சம்பவ இடத்திலேயே குட்டி குரங்கு உயிரிழக்க, தாய் குரங்குகள் உள்பட மற்ற குரங்குகள் செய்வதறியாது கூச்சலிட்ட காட்சி கண்கலங்க வைத்த‌து.
Tags:    

மேலும் செய்திகள்