கொடைக்கானல் : சவாலான பள்ளத்தாக்கில் சடலத்தை மீட்கும் பணி..

கொடைக்கானலில் நண்பர்களால் கொல்லப்பட்ட நபரின் சடலம் 700 அடி பள்ளத்தாக்கில் சிக்கி கிடப்பதால், மீட்கும் பணி சவாலாக உள்ளதாக தீயணைப்பு படை வீர‌ர்கள் தெரிவித்துள்ளனர்.

Update: 2018-08-30 02:29 GMT
மதுரை ஜெய்ஹிந்து புரத்தை சேர்ந்த மணிகண்டன் . அவரது நண்பர்களுடன் கொடைக்கானல் அருகேயுள்ள வட்டக்கானல் வனப்பகுதிக்கு, கடந்த சில தினங்களுக்கு முன் சுற்றுலா சென்றுள்ளார். மணிகண்டன், அவரது நண்பர்களில் ஒருவரது மனைவியுடன் முறைகேடான உறவு வைத்திருந்த‌தாக கூறப்படுகிறது. இதனால், மற்ற நண்பர்கள் சேர்ந்து, மணிகண்டனை கொலை செய்து சடலத்தை பள்ளத்தாக்கில் வீசியுள்ளனர். சீனிவாசன் என்பவர் அளித்த தகவலின் பேரில், மணிகண்டனின் உடல் 2500 அடி பள்ளத்தாக்கில் 700 அடியில் பாறைகளுக்கு இடையே 
கண்டறியப்பட்டுள்ளது. சவாலான பள்ளதாக்கில் இருந்து விரைவில் சடலம் மீட்கப்படும் என தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்