விழுப்புரத்தில் லஞ்சம் வாங்கிய தாலுகா அலுவலக உதவியாளர் கைது

விழுப்புரம் அருகே சின்னசேலத்தில், 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தாலுகா அலுவலக உதவியாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-08-24 04:34 GMT
விழுப்புரம் அருகே சின்னசேலத்தில், 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தாலுகா அலுவலக உதவியாளர் கைது செய்யப்பட்டார். சிட்டா அடங்கலை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்காக, தாலுகா அலுவலகம் வந்த சுமதி என்பவரிடம், அலுவலக உதவியாளர் உமா மகேஷ்வரி ரூபாய் 5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. சுமதி இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அவர்கள் ரசாயனம் தடவிய நோட்டை சுமதியிடம் கொடுத்து அனுப்பினர். சுமதியிடமிருந்த ரசாயனம் தடவிய நோட்டை லஞ்சமாக பெற்ற உமாமகேஷ்வரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்