காவல்துறை உயர் அதிகாரிகள் 16 பேர் அதிரடி இடமாற்றம்

சென்னை பெரு மாநகர காவல்துறை கூடுதல் ஆணையாளர்கள் சாரங்கன் மற்றும் ஜெயராமன் உள்ளிட்ட 16 காவல்துறை உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-08-22 04:56 GMT
* சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக சைலேஷ் குமார் யாதவ் நியமிக்கப்பட்டு உள்ளார்.

* தமிழ்நாடு போலீஸ் போக்குவரத்து கழக ஏ.டி.ஜி.பி.யாக சைலேஷ் குமார் யாதவுக்கு பதிலாக சு.அருணாச்சலம் நியமிக்கப்பட்டு உள்ளார்.

* வடக்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த சி.ஸ்ரீதர்,  சென்னை கிரைம் சி.ஐ.டி. பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

* சென்னை பெருமாநகர தெற்கு கூடுதல் ஆணையர் எம்.சி.
சாரங்கன், மாநில குற்ற ஆவண காப்பக ஐ.ஜி.யாக இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

* இதேபோன்று, சென்னை பெரு மாநகர வடக்கு கூடுதல் ஆணையர் எச்.எம்.ஜெயராம்,  தலைமையிடத்து ஐ.ஜி.யாக ஆர். தினகரனுக்கு பதிலாக மாற்றப்பட்டு உள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்