விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ராமச்சந்திராபுரம் கிராமத்தில் உள்ள நூலகத்திற்கு நாள்தோறும் ஏராளமான இளைஞர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் வந்து செல்கின்றனர். பல மாணவ, மாணவிகள் அரசு போட்டி தேர்வுகளுக்கும் நூலகத்தில் வந்து படித்து ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில், நூலகம் தற்போது மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில், புத்தங்களும் நனைந்து சேதமடைகின்றன. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் நூலகம் உள்ளதால், படிக்க வருவதற்கே அச்சமாக இருப்பதாக மாணவ மாணவிகள் தெரிவிக்கின்றனர்.