முல்லை பெரியாறு அணையில் மூவர் கண்காணிப்பு குழு ஆய்வு

முல்லை பெரியாறு அணையில்,மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் குல்சன்ராஜ் தலைமையிலான மூவர் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.

Update: 2018-08-05 05:07 GMT
முல்லை பெரியாறு அணையில், மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் குல்சன்ராஜ் தலைமையிலான மூவர் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என கடந்த 2014ம் ஆண்டு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் தலைமையில் மூவர் குழுவை நியமித்தது. இந்த நிலையில் மழைக்காலங்களில் அணையில் செய்யப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், அணையின் பாதுகாப்பு குறித்தும் மூவர் குழுவினர் இன்று ஆய்வு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்