"தமிழ் பண்பாட்டு கலைகளில் அசத்தும் மாணவர்கள்"

தஞ்சை மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் ஆசிரியர் ஒருவரின் ஊக்கத்தால்,நாதஸ்வரம்,சிலம்பம்,பறையாட்டம் என பல கலைகளில் அசத்தி வருகின்றனர்.

Update: 2018-07-26 07:59 GMT
தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், ஜெய்பிரபு என்ற ஆசிரியர் பணியாற்றி வருகிறார்.9 ஆம் வகுப்பு புதிய பாடத்திட்டத்தில்,தமிழ்கலாச்சாரங்கள் குறித்த பாடத்தை மாணவர்களுக்கு செயல்முறை விளக்கமாக கற்று  கொடுப்பது என அவர் முடிவெடுத்துள்ளார்.அதன்படி,முதலில் வகுப்பறையில் ஸ்மார்ட் போர்டு முறையில்,திரையில்,கலைகள் குறித்த வீடியோக்களை ஒளிபரப்பிய அவர் பின்னர் மாணவர்களையும் கலைகளை செய்ய ஊக்கப்படுத்தியுள்ளார்.அதன் விளைவாக, தற்போது,மாணவ மாணவிகள் சிலம்பம்,நாதஸ்வரம், பறையாட்டம் என அசத்தி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்