இணையத்தில் வீடியோவை பார்த்து பிரசவம் செய்துகொண்ட இளம்பெண் உயிரிழப்பு...

திருப்பூரில் இயற்கை மருத்துவ முறையில் பிரசவம் செய்து கொண்ட பெண் இறந்த போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2018-07-26 06:08 GMT
திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி கிருத்திகா தனியார் பள்ளியில் ஆசிரியையாக இருந்துள்ளார்.   இயற்கை மருத்துவத்தின் மீது ஆர்வம் கொண்ட இந்த தம்பதியினருக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான கிருத்திகா இயற்கை மருத்துவ முறையில் சுகப் பிரசவம் தொடர்பான வீடியோக்களை இணையத்தில் பார்த்து வந்துள்ளார். அவருக்கு கடந்த 22 ந்தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கிருத்திகா, கார்த்திகேயனின் நண்பரான பிரவீனின் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டு அவரது மனைவி இயற்கை மருத்துவ முறையில் பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது.  கிருத்திகாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் முறையான பிரசவம் ஆகாததால் மயக்கமடைந்த கிருத்திகா, திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக கிருத்திகாவின் தந்தை அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்