சீர்காழியில் வெட்டிக் கொல்லப்பட்ட அ.தி.மு.க. நிர்வாகி - அமைச்சர் ஓ.எஸ். மணியன் அஞ்சலி

குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு

Update: 2018-07-24 14:11 GMT
* நாகை மாவட்டம் சீர்காழியில் அ.தி.மு.க. மாணவரணி செயலாளர் ரமேஷ்பாபு, வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் நேற்று படுகொலை செய்யப்பட்டார். 

* சம்பவ இ​டத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சஞ்சய் சேகர், குற்றவாளிகளை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டதாக தெரிவித்தார். 

* இதனி​டையே, அரசு மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர் ஓ.எஸ்.மணியன்,  அங்கு வைக்கப்பட்டிருந்த ரமேஷ்பாபு உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

* இந்நிலையில், ரமேஷ்பாபுவை படுகொலை செய்ய கொலையாளிகள் பயன்படுத்திய இரண்டு கார்களை போலீசார் இன்று கண்டுபிடித்துள்ளனர்.  திருக்கடையூர் அருகே ஆனைகோவில் கிராமத்தில் உள்ள கருவேலமர காட்டில் அந்த கார்களை மீட்ட போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்