கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்...காப்பாற்றி முதலுதவி சிகிச்சை அளித்த மீனவர்கள்...

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் மீன்பிடி துறைமுகத்தில் அலை தடுப்புச்சுவர் மீது நின்ற இளம்பெண் ஒருவர், திடீரென்று கடலில் குதித்துள்ளார்

Update: 2018-07-06 02:57 GMT
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் மீன்பிடி துறைமுகத்தில் அலை தடுப்புச்சுவர் மீது நின்ற இளம்பெண் ஒருவர், திடீரென்று கடலில் குதித்துள்ளார். அப்போது அங்கிருந்த மீனவர்கள், உயிருக்கு போராடிய பெண்ணை பத்திரமாக மீட்டு, மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அப்போது போலீசார் அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில், அவரது பெயர் ஸ்ரீவித்யா என்றும், அவர் பொறியியல் கல்லூரி மாணவி என்பதும் தெரிய வந்துள்ளது. இளம்பெண் தற்கொலைக்கு முயன்றது ஏன் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்