பிச்சையெடுத்த மாற்றுத்திறனாளி தடகள வீரர்..!

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தடகள வீரர் மன்மோகன் சிங் லோதி, பிச்சை எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-09-04 06:19 GMT
2009-ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் ஒரு கையை இழந்த போதிலும், தடகளப் போட்டிகளில் பங்கேற்று, தேசிய அளவில் மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு வெண்கலப் பதக்கத்தைப் வென்றுகொடுத்தார். 

மாநில அளவில் பல பதக்கங்களையும் வென்றுள்ளார். இந்நிலையில், அவர் போபால் நகர வீதிகளில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த காட்சி வெளியாகியுள்ளது. 

வேலை வாய்ப்பு உட்பட தமக்களித்த வாக்குறுதியை மாநில அரசு நிறைவேற்ற வில்லை என்று, அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்