45-வது சர்வதேச பறக்கும் போட்டி: உடை அலங்காரத்தில் அசத்திய வீரர்கள்

சீனாவின் கிங்ஹாய் மாகாணத்தில் இகாரஸ் கோப்பைக்கான 45வது சர்வதேச பறக்கும் போட்டி நடைபெற்றது.

Update: 2018-07-16 10:21 GMT
சீனாவின் கிங்ஹாய் மாகாணத்தில் இகாரஸ் கோப்பைக்கான 45வது சர்வதேச பறக்கும் போட்டி நடைபெற்றது. 

இதில் 10 நாடுகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட சாகச வீரர்கள் கலந்து கொண்டனர். கடந்த 1974 ஆம் ஆண்டு முதல் பிரான்ஸில் நடைபெற்று வரும் இந்த போட்டிகள் முதல் முறையாக சீனாவில் நடைபெற்றது. இதில் பாராசூட், பாராகிளைடிங், ஹாட் பலூன் என்று பல்வேறு பறக்கும் சாகசத்தில் வீரர்கள் ஈடுபட்டனர், குறிப்பாக வீரர்களின் உடை அலங்காரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதை தொடர்ந்து, அடுத்த கட்ட போட்டிகள் பிரான்ஸில் வருகின்ற செப்டம்பர் மாதம் அரங்கேவுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்