கதிர் ஆனந்தை குத்து டான்ஸ் போட்டு வரவேற்ற வேலூர் மூதாட்டிகள்

Update: 2024-04-05 14:22 GMT

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விடுபட்டவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தி பெற்று தருவேன் என வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் உறுதி அளித்துள்ளார். வேலூர் மாவட்டம் வளத்தூரில் பிரசாரம் மேற்கொண்ட அவர், தேர்தலுக்கு பிறகு இதற்கான சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று முதல்வர் அறிவித்திருப்பதாக கூறினார். முன்னதாக, திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை, மேளதாளங்கள் இசைக்க வரவேற்கப்பட்டார். அங்கிருந்த மூதாட்டிகள், இசையை கேட்டு ஆட்டம் போட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்