ஜிப்மர் மருத்துவமனை விவகாரம்.. பிரதமர் மோடியை சாடிய புதுச்சேரி முன்னாள் முதல்வர்

Update: 2024-02-26 13:04 GMT

தேர்தலுக்காக ஜிப்மர் மருத்துவமனை கிளையை அவசரகதியில் பிரதமர் மோடி திறந்து வைத்ததாக புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரி காரைக்கால் ஜிப்மர் மருத்துவமனையில், போதிய மருத்துவர்கள் இல்லை என்றும், புதுச்சேரி மற்றும் மத்திய அரசு கவனிக்காததால் அந்த மருத்துவமனையின் தரம் குறைத்து வருவதாகவும் குற்றம்சாட்டினார். புதுச்சேரி மக்கள், தமிழிசை சவுந்தரராஜன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட எந்தவொரு வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களையும் ஆதரிக்க மாட்டார்கள் என்றும் நாராயணசாமி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்