"சனாதனத்தை இழிவு படுத்திய திமுக" - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Update: 2024-04-28 01:38 GMT

சனாதனத்தை இழிவுபடுத்திய திமுக தலைவர்களை அழைத்து, இந்தியா கூட்டணி கௌரவித்ததாக, பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

மகாராஷ்டிரா மாநிலம் கோல்ஹாப்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் வேண்டப்பட்ட கட்சி திமுக என்றார். சனாதன தர்மத்தை அவதூறு செய்வதாக குற்றம் சாட்டிய பிரதமர், சனாதன தர்மம் டெங்கு மற்றும் மலேரியா போன்றது என திமுக தலைவர்கள் அவதூறு செய்ததாகவும் கூறினார்.

சனாதன தர்மத்தை அழிப்போம் என கூறிய திமுக தலைவர்களை மகாராஷ்டிராவிற்கு அழைத்து, இந்தியா கூட்டணி, கௌரவப்படுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். ஓராண்டுக்கு ஒரு பிரதமர் என்பதுதான் இந்தியா கூட்டணியின் பார்முலா என்று கூறிய பிரதமர் மோடி, ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்தால் ஐந்து பிரதமர்கள் இருப்பார்கள் என்றும் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்