ஸ்ட்ரிக்ட்டாக மறுத்ததால் ஆத்திரம்... போலீசாருடன் மல்லுக்கு நின்ற பாமகவினர் - பரபரப்பு காட்சி

Update: 2024-03-28 16:30 GMT

சேலத்தில் காவல்துறையினர் அராஜகத்தில் ஈடுபடுவதாக கூறி பாமக வேட்பாளர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 39 வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். அவர்களின் வேட்புமனு பரிசீலனை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிலையில், பாமக வேட்பாளர், அண்ணாதுரையின் வேட்பு மனு, பரிசீலனையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர், பாமகவினர் புறப்பட்டு செல்லும் போது, அவர்களது வாகனத்தில் இருந்த கட்சி கொடியை அகற்ற போலீசார் கூறியதாக தெரிகிறது. இதனால், போலீசாருக்கும், பாமகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்