குழந்தைக்கு பெயர் வைத்த செளமியா அன்புமணி... இப்படியொரு பெயரா..! - மகிழ்ச்சியில் பெற்றோர்

Update: 2024-04-16 16:30 GMT

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் வெள்ளிச்சந்தை , மல்லுப்பட்டி ஆகிய பகுதிகளில் வாகன பிரச்சாரத்தை முடித்து கொண்டு பந்தாரஅள்ளி கிராமத்திற்கு சென்ற போது ஒரு பாமக தொண்டரின் பெண் குழந்தைக்கு சம்யுக்தா என்று பெயர் வைத்து மகிழ்ந்தார். தொடர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட செளமியா அன்புமணிக்கு பொது மக்கள் சால்வை அணிவித்தும் , ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்