"தமிழகத்தில் எம்பிக்களை குறைக்க மத்திய அரசு சதி" - முதலமைச்சர் ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு

Update: 2023-10-07 02:32 GMT

மக்கள் தொகை குறைந்து விட்டதாக கூறி நாடாளுமன்ற தொகுதிகளை குறைக்கின்ற சதியை அரங்கேற்ற பார்க்கிறார்கள் என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.தஞ்சையில் திராவிடர் கழகம் சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் தாய் வீட்டில் கலைஞர் என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. தி.க. தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற விழாவில், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ், எம்பிகள் டிஆர்.பாலு, ஆ.ராசா, எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், உள்ளிட்டோர்

கலந்து கொண்டனர். விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, திராவிட மாடல் அரசின் ஒப்பற்ற முதலமைச்சர், சமூக நீதிக்கான சரித்திர நாயகர் ஆளுமைக்கான விருதினை, கி.விரமணி, வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்