அம்மா உணவகம் சூறையாடிய சம்பவம்; திமுகவின் வன்முறை தொடங்கிவிட்டது - அதிமுக தலைமை கண்டனம்
சென்னை ஜேஜே நகர் அம்மா உணவகம் சூறையாடப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை ஜேஜே நகர் அம்மா உணவகம் சூறையாடப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், திமுக ஆட்சி அமையும் முன்பே திமுகவினரின் வன்முறை தொடங்கி விட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் புதிதாக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலின், இது குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக தலைமை கோரிக்கை முன்வைத்துள்ளனர்.