"போடோ ஒப்பந்தம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது" - பிரதமர் நரேந்திர மோடி

தம்மை தடியால் தாக்குபவர்களிடம் இருந்து, மக்களின் அன்பு கவசமாக இருந்து பாதுகாக்கும் என ராகுல் காந்தி பேச்சுக்கு, பிரதமர் நரேந்திர மோடி பதிலடி கொடுத்துள்ளார்.

Update: 2020-02-07 13:55 GMT
அசாம் மாநிலம் கோக்ரஜாரில், போடோ ஒப்பந்தத்தின் கொண்டாட்ட விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, போடோ அமைதி ஒப்பந்தத்திற்கு உதவிய அனைவருக்கும் நன்றி என்றார். அமைதியை நிலைநாட்டும் போடோ ஒப்பந்தம், வரலாற்று சிறப்பு வாய்ந்தது என்றும் அவர் புகழாரம் சூட்டினார். 


Tags:    

மேலும் செய்திகள்