அடையாளம் தெரியாதவர்களுக்கு பதில் அளிக்க அவசியம் இல்லை - திருநாவுக்கரசர்
அடையாளம் தெரியாதவர்களுக்கு பதில் அளிக்க அவசியம் இல்லை - திருநாவுக்கரசர்
ராஜீவ் கொலையாளிகளை, விடுவிக்க, ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தெரிவித்துள்ளார்.சென்னை சத்திய மூர்த்தி பவனில் காங்கிரஸ் செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சிரிவெல்ல பிரசாத் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின்,செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர். சேலத்தில், சிறுமி ராஜலட்சுமிக்கு பாலியல் துன்பம் அளித்து கொன்றவர்கள் மீது அரசு, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்தார்.தொடர்ந்து பேசிய திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ். ஆதரவாளர்கள் என்ற பெயரில் வரும் அறிக்கைகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றார்.