"ஆட்சியின் மீதான விமர்சனங்களுக்கு ஆதாரம் இல்லை" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
அதிமுக அரசின் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்;
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய முதலமைச்சர், அதிமுக அரசு மீது பொய்யான குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் கூறி வருவதாக தெரிவித்தார்.