இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் அதிமுக ஒதுங்கிக் கொள்ள வேண்டும் - தங்கத் தமிழ்செல்வன்

திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால், கட்சியையும், கொடியையும் கொடுத்துவிட்டு அதிமுக ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என தங்கத் தமிழ்செல்வன் கூறினார்.

Update: 2018-09-06 13:32 GMT
மறைந்த முன்னாள் எம்.பி மூக்கையாத் தேவரின் 39வது நினைவு தினத்தை ஒட்டி, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால், கட்சியையும், கொடியையும் கொடுத்துவிட்டு அதிமுக ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்