உரிமையாளர் புகைப்படம் முன் கண்ணீர் விட்டு அழும் வளர்ப்பு நாய் - கண்கலங்க வைக்கும் காட்சிகள்

Update: 2022-10-21 11:17 GMT

கேரளாவில் மறைந்த உரிமையாளரின் புகைப்படத்தின் முன்பு அடிக்கடி சென்று தன் வேதனையை வெளிப்படுத்தும் வளர்ப்பு நாயின் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

கோழிக்கோடு அருகே காரப்பறம்பா பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக அவர்களது வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் லியோ என்ற பெயர் கொண்ட வளர்ப்பு நாய், அடிக்கடி பாலகிருஷ்ணனின் புகைப்படங்களை நோக்கி குரைத்து, கன்ணீர் விட்டு தனது வேதனையை வெளிப்படுத்தி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்