கிணற்றுக்குள் தவறி விழுந்த பூனை... காப்பாற்ற உள்ளே இறங்கிய நொடியில் துடிதுடித்து பிரிந்த 5 உயிர் -அதிர வைக்கும் காரணம்

Update: 2024-04-10 13:10 GMT

பூனையை காப்பாற்ற கிணற்றில் குதித்த 5 பேர் பரிதாபமாக பலியான சோக சம்பவம் மகாராஷ்டிராவில் அரங்கேறியுள்ளது...

மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகர் வத்கி கிராமத்தில் பாழடைந்த கிணறு ஒன்றில் பூனை ஒன்று தவறி விழுந்த நிலையில் அதைக்காப்பாற்ற கிணற்றிற்குள் குதித்த நபர் உள்ளே சிக்கிக் கொண்டார்... அவரை வெளியில் தூக்க உறவினர்கள் நால்வர் கிணற்றில் குதித்த நிலையில் ஐவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். விஷவாயு தாக்கி அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்