கேரளாவில் தொடரும் கனமழை - தண்ணீரில் மூழ்கிய அரசு பேருந்து.. சிக்கிய பயணிகள் பத்திரமாக மீட்பு

கேரளாவில் தொடரும் கனமழை - தண்ணீரில் மூழ்கிய அரசு பேருந்து.. சிக்கிய பயணிகள் பத்திரமாக மீட்பு

Update: 2021-10-16 11:46 GMT
கேரளாவில் தொடரும் கனமழை - தண்ணீரில் மூழ்கிய அரசு பேருந்து.. சிக்கிய பயணிகள் பத்திரமாக மீட்பு 
 
கேரள மாநிலம் கோட்டயம் அருகே அரசு பேருந்து மழை நீரில் மூழ்கியது. பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் கோட்டயம் அருகே காஞ்ஞிரப்பள்ளி விராஜ்பேட்டை சாலையில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.அப்போது அவ்வழியே சென்ற  அரசு பேருந்து வெள்ளத்தில்  மூழ்கியது .  பேருந்தில் சிக்கி தவித்த பயணிகளை அப்பகுதி மக்கள் பத்திரமாக மீட்டனர். யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அந்த பகுதியில் மழைநீர் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகின்றனர். கோட்டயம் அருகே மணிமலை ஆற்றின் கரையில் அமைக்கப்பட்டிருந்த நீர்த்தேக்க தொட்டி மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. 
 
Tags:    

மேலும் செய்திகள்