துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட சிறுமிகள் - வயதானோருக்கு திருமணம் முடித்த அவலம்

ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட 2 சீக்கிய சிறுமிகள், கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, வயதான இருவருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்ட விவகாரம் பூதாகரமாகியுள்ளது.

Update: 2021-06-28 11:30 GMT
ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட 2 சீக்கிய சிறுமிகள், கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, வயதான இருவருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்ட விவகாரம் பூதாகரமாகியுள்ளது. 

இது தொடர்பாக தீவிர போராட்டத்தில் இறங்கியுள்ள சீக்கியர்கள், கடத்தப்பட்ட சிறுமிகள் திருப்பி ஒப்படைக்கப்படுவார்கள் என நம்பிக்கை அளித்த ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவிற்கு நன்றி தெரிவித்தனர். மேலும், அவர் சிறுபான்மையின சீக்கியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண குழு அமைக்கப்படும் என்று உறுதியளித்ததாகவும் கூறினர். அத்துடன், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசத்தைப் போலவே, யூனியன் பிரதேசங்களிலும் கட்டாய மத மாற்றத்திற்கு எதிராக சட்டங்களை வலுவாக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்

Tags:    

மேலும் செய்திகள்