"பாஜகவினரால் பலமுறை மிரட்டப்பட்டுள்ளேன்" - கேரள முதல்வர் பினராயி விஜயன்

பாஜகவினர் விடுத்து வரும் மிரட்டல்களை பொருட்படுத்தப் போவதில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-16 03:37 GMT
பாஜகவினர் விடுத்து வரும் மிரட்டல்களை பொருட்படுத்தப் போவதில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரள மாநில பாஜக பொது செயலாளரான ராதாகிருஷ்ணனின் மிரட்டலுக்கு பதிலளித்த முதலமைச்சர், பல ஆண்டுகளுக்கு முன்பே பாஜகவினர் தனக்கு மிரட்டல்கள் விடுத்ததாகவும், சிறையை தாண்டி அந்த மிரட்டல்கள் இருந்தபோதும், தான் வீட்டிலேயே தூங்கியதாகவும் தெரிவித்தார். பாஜகவினர் தீர்மானிப்பது கேரளாவில் நடக்காது என்பது கடந்த சட்டமன்ற தேர்தலில் நிரூபணமானதாகவும் பினராயி விஜயன் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்