மேற்கு வங்கம்: டேங்கர் லாரி - சரக்கு வாகனம் மோதி விபத்து - 3 பேர் பலி

மேற்கு வங்கம் அருகே டேங்கர் லாரியும் சரக்கு வாகனமும் மோதி தீ பிடித்த விபத்தில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர்.

Update: 2021-06-13 08:36 GMT
மேற்கு வங்கம் அருகே டேங்கர் லாரியும் சரக்கு வாகனமும் மோதி தீ பிடித்த விபத்தில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு சொந்தமான டேங்கர் லாரி, அசன்சோலில் இருந்து ராணிகஞ்ச் பகுதிக்கு சென்றுள்ளது. மறுமுனையில் அசன்சோலுக்கு சரக்கு வாகனம் ஒன்று வந்துள்ளது. கல்லா மோர் பகுதியில், எதிர்பாராத விதமாக இந்த இரு வாகனங்களும் மோதிக் கொண்டன. இதில், இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்த நிலையில், 3 பேர் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்