சிறைகளில் மருத்துவ வசதி மேம்பாடு;டெலிமெடிசின் வசதி வழங்கப்படும் - கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

கேரள மாநில சிறைகளில் மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-09 02:42 GMT
கேரள மாநில சிறைகளில் மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன், தலைமை செயலாளர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து, கேரள சிறைகளில் கைதிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சையை உறுதி செய்ய, சிறைகளில் தலா இரண்டு மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து சிறைகளிலும் டெலிமெடிசின் வசதி வழங்கப்படும் என்றும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள கைதிகளுக்கு சிறப்பு சிகிச்சை வசதிகள் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்