"விமானங்களில் நடு இருக்கைகளை காலியாக வைக்க வேண்டும்" - விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

விமானங்களில் நடு இருக்கையை காலியாக வைக்க விமான நிறுவனங்களுக்கு, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவி​ட்டுள்ளது.

Update: 2020-06-01 14:02 GMT
விமானங்களில் நடு இருக்கையை காலியாக வைக்க விமான நிறுவனங்களுக்கு, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் 
உத்தரவி​ட்டுள்ளது. இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, தற்போது, உள்நாட்டு விமான போக்குவரத்து 50-60 சதவீதம் வரை இயக்கப்படும் நிலை உருவாகி உள்ளதாக தெரிவித்தார். இது பன்னாட்டு  விமான போக்குவரத்தை மீண்டும் தொடங்கும் திறனை மேம்படுத்த உதவும் எனவும் தெரிவித்துள்ளார். விமானங்களில் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் அவ​ர் அறிவுறுத்தி உள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்