"சிஏஏ போராட்டதிற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபரால் பரபரப்பு : மர்ம நபரை அடித்து உதைத்த போராட்டக்காரர்கள்"

டெல்லியில் ஷகீன் பாக் என்ற இடத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

Update: 2020-01-28 19:08 GMT
டெல்லியில் ஷகீன் பாக் என்ற இடத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் இந்த போராட்ட களத்தின் உள்ளே துப்பாக்கியுடன் ஒரு மர்ம நபர் நுழைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த நபர் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்களுடன் பேசுவதற்காக அந்த நபர் சென்றிருப்பதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்