ஐ.சி.யூ.வில் ஆக்சிஜனுக்கு பதில் புகை :ஆந்திரா அரசு மருத்துவமனையில் குழந்தை பலி

ஆந்திராவில் ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட கோளாறால் பிறந்து 6 மணி நேரமே ஆன ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2019-11-03 09:07 GMT
அனந்தபூர் மாவட்டம் அடுத்த இந்துபூரை சேர்ந்த கர்ப்பிணி பானு மொபீனா, அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், மூச்சு திணறல் இருப்பதாக கூறி தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆக்சிஜன் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், சற்று நேரத்தில், ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக புகை கிளம்பியுள்ளது. இதனால், மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில், குழந்தை இறந்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள், மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெற்றோருடன் மருத்துவர்கள் சமாதான பேச்சு நடத்தினர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். எனினும், பிறந்து 6 மணி நேரத்தில் பச்சிளம் குழந்தை, மருத்துவமனை அலட்சியத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்