நிலச்சரிவில் உயிரிழந்தவரின் உடலுக்கு இருதரப்பினர் உரிமை கோரல் : மரபணு சோதனை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை

கேரளாவில் நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்ட ஆண் சடலத்திற்கு இருதரப்பினர் உரிமை கோரியதால், அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

Update: 2019-08-20 04:20 GMT
கேரளாவில் நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்ட ஆண் சடலத்திற்கு இருதரப்பினர் உரிமை கோரியதால், அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.  வயநாடு மாவட்டம் புத்துமலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்தவர்களை தேடும் பணி கடந்த ஒருவாரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், நேற்று மீட்கப்பட்ட ஆண் சடலம் ஒன்றுக்கு அதேபகுதியை சேர்ந்த அண்ணய்யா என்பவரது குடும்பத்தினரும், பொள்ளாச்சியை சேர்ந்த தொழிலாளர் கவுரிசங்கர் குடும்பத்தினரும் உரிமை கோரியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அந்த உடலை மரபணு பரிசோதனைக்கு, பின்னர் உரியவர்களிடம் ஒப்படைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்