நகரியில் நடிகை ரோஜாவுக்கு உற்சாக வரவேற்பு
ஆந்திர மாநில உள் தொழிற்சாலை கட்டமைப்பு தலைவராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக தமது சொந்த தொகுதியான நகரிக்கு வந்த ரோஜாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆந்திர மாநில உள் தொழிற்சாலை கட்டமைப்பு தலைவராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக தமது சொந்த தொகுதியான நகரிக்கு வந்த ரோஜாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு சக்கர வாகன ஊர்வலத்தில் கலந்துகொண்டு மக்களை சந்தித்த அவர், புதிதாக கட்டப்பட்ட ஒய்.எஸ்.ஆர். ராஜசேகர ரெட்டி சிலையை திறந்து வைத்தார். பின்னர் நகரியில் புதிய தொழிற்சாலை கட்டப்படும் என்றும் அங்குள்ள இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு அதிகரிக்கப்படும் என்றும் ரோஜா உறுதியளித்தார்.