சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு : கேரளாவின் பல்வேறு பகுதிகளில் போராட்டம்

சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்ததால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Update: 2019-01-02 13:29 GMT
சபரிமலை சன்னிதானத்திற்குள் பெண்கள் அனுமதிக்கப்பட்ட சம்பவத்திற்கு கேரளாவில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. பாஜக மற்றும் சபரிமலை கர்ம சமிதி சங்கம் சார்பில் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. எரிமேலி, கோதமங்கலம், நிலக்கல், காசர்கோடு உள்ளிட்ட பல பகுதிகளில் போராட்டம் மற்றும் முற்றுகை போராட்டங்கள் நடந்தது. மேலும் முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் காவல்துறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனால் மாநிலத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்