ஜி-20 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் டெல்லி புறப்பட்டார்

அர்ஜெண்டினாவின் பியூனோஸ் ஏர்ஸில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டில் (Buenos Aires) பங்கேற்ற பிரதமர் நரேந்திரமோடி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு மணிக்கு அங்கிருந்து டெல்லிக்கு புறப்பட்டார்.

Update: 2018-12-02 03:20 GMT
அர்ஜெண்டினாவின் பியூனோஸ் ஏர்ஸில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டில் (Buenos Aires) பங்கேற்ற பிரதமர் நரேந்திரமோடி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு மணிக்கு அங்கிருந்து டெல்லிக்கு புறப்பட்டார். வரும் 2021 ஆம் ஆண்டு இந்தியாவும், 2022 ஆம் ஆண்டு இத்தாலியும் மாநாட்டை நடத்த வேண்டிய நிலையில், பிரதமர் மோடியின் வேண்டுகோளை இத்தாலி உள்ளிட்ட நாடுகள் ஏற்றுக் கொண்டதற்கு பிரதமர் நன்றி தெரிவித்து உள்ளார். பிரதமரின் வேண்டுகோளை ஜி 20 நாடுகளின் தலைவர்கள் ஏற்ற நிலையில், 2022 ஆம் ஆண்டு டெல்லியில் ஜி 20 மாநாட்டை இந்தியா நடத்த உள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்