நடுரோட்டில் கடத்திச் செல்லப்பட்ட 65 வயது நகைக்கடை உரிமையாளர்...

லக்னோவில், 65 வயதான நகைக்கடை உரிமையாளர் ஒருவர் நடுரோட்டில், மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டார்.

Update: 2018-10-05 23:19 GMT
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், 65 வயதான நகைக்கடை உரிமையாளர் ஒருவர் நடுரோட்டில், மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டார். கடையில் இருந்து வீட்டுக்கு அவர் திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் சிலர், அவரை கடத்திச் செல்லும் காட்சிகள், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன. அந்த காட்சிகளை வெளியிட்டுள்ள லக்னோ போலீசார், அதன் மூலமாக மர்ம நபர்களை தேடிவந்தனர். 

நேபாளத்தில் மீட்கப்பட்ட நகைக்கடை உரிமையாளர்

இதற்கிடையே, ஒரு வார தேடுதல் வேட்டைக்கு பிறகு, நேபாளத்தில் கிஷோரிலால் சோனி மீட்கப்பட்டுள்ளார். நகைக்கடை உரிமையாளரின் குடும்பத்தினருக்கு வந்த செல்போன் அழைப்புகளைக் கொண்டு நேபாளத்தில் கடத்தல்காரர்கள் இருப்பதை அறிந்த உத்தரபிரதேச போலீசார், அங்குள்ள இந்திய தூதரகம் மூலமாக நகைக்கடை உரிமையாளர் கிஷோரிலாலை மீட்டுள்ளனர். 



Tags:    

மேலும் செய்திகள்