இந்தியா- அமெரிக்கா இடையே இன்று பேச்சு

முதல்முறையாக இரு நாட்டு பிரதிநிதிகள் பேச்சு நடத்துகின்றனர்

Update: 2018-09-05 21:36 GMT
இந்தியா- அமெரிக்கா இடையே பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையிலான பேச்சுவார்த்தை நடத்த இரு நாடுகளும் கடந்த ஆண்டு ஒப்புக்கொண்டன.இதைத் தொடர்ந்து, டெல்லியில் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் இந்தியத்  தரப்பில், பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ், வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ ஆகியோர் பங்கேற்கின்றனர். இதில், இருநாடுகளுக்கு இடையிலான முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.இந்நிலையில், பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக, அமெரிக்க அமைச்சர்கள் டெல்லி விமான நிலையம் வந்தனர். அவர்களை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வரவேற்றார்.
Tags:    

மேலும் செய்திகள்