மீண்டும் ஊடகங்களின் பார்வையை ஈர்த்துள்ள தங்கசாமியார்

கடந்த கும்பமேளாவின் போது கிலோ கணக்கில் கழுத்தில் நகை அணிந்தபடி வலம் வந்த சாமியார் ஊடகங்களின் பார்வையை ஈர்த்தார்.

Update: 2018-08-03 07:29 GMT
கடந்த கும்பமேளாவின் போது கிலோ கணக்கில் கழுத்தில் நகை அணிந்தபடி வலம் வந்த சாமியார் ஊடகங்களின் பார்வையை ஈர்த்தார்.. இடையில் அவரைப் பற்றிய பேச்சு இல்லாமல் இருந்த நிலையில், மீண்டும் ஊடகத்தின் பார்வையை தன் மீது திருப்பியுள்ளார்.

தற்போது கன்வர் யாத்திரையில் பங்கேற்று ஹரித்வார் சென்றுள்ள அவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.. 
 தங்கம், வைரம் உட்பட 20 கிலோ எடையளவுக்கு  ஆபரணங்களை அணிந்துகொண்டு உலா வருவதால் போ​ீ​போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.. 

புனித இடங்களுக்கு சென்று கங்கை தீர்த்தத்தை சேகரித்து சிவனுக்கு அபிஷேகம் செய்வதே  கன்வர் யாத்திரை என அழைக்கப்படுகிறது.. நகைகளையும் கடவுளாக பார்ப்பதாக கூறுகிறார் இந்த தங்கசாமி. இவரது முழு பெயர்  Baba aka Sudhir Makkar என்பதாகும்.
 
டெல்லியில் துணி வியாபாரம் செய்துவந்த இவர்,  அதை கைவிட்டு ஆன்மிகத்தில் இறங்கிவிட்டார்..  செய்த பாவங்களில் இருந்து விடுபடவே சாமியாராக மாறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.. 
Tags:    

மேலும் செய்திகள்