பாலியல் வன்கொடுமை நடந்ததாக போலீசில் புகார் - 5 மாத கருவை பையில் எடுத்துச் சென்ற பெண்

உத்தரபிரதேசத்தில் இளம்பெண் ஒருவர், 5 மாத கருவை காவல் நிலையத்துக்கு எடுத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2018-07-22 17:54 GMT
உத்தரபிரதேச மாநிலம் அம்ரோ அருகே உள்ள ஹசன்புர் போலீஸ் நிலையத்துக்கு இளம் பெண் ஒருவர், ஒரு பையுடன் வந்துள்ளார். துர்நாற்றம் வீசிய அந்த பைக்குள் 5 மாத கரு ஒன்று இருந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த பெண்ணிடம் விசாரித்தபோது, சில மாதங்களுக்கு முன், ஒரு இளைஞர் பலாத்காரம் செய்ததால் கர்ப்பமானதாகவும்,  திருமணம் செய்ய மறுத்ததால், தனது 5 மாத கருவை கலைத்ததாகவும் கூறினார். மேலும், கருவை பையில் எடுத்து வந்திருப்பதாகவும் இளைஞர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அந்த பெண் புகார் அளித்தார். இதையடுத்து, கருவை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்