"ஜெயலலிதா சிகிச்சை - 3 சிடிக்கள் விரைவில் வெளிவரும்" - புகழேந்தி தகவல்
"ஜெயலலிதா மரணம்- துணை முதல்வரை விசாரிக்காதது ஏன்?" - புகழேந்தி
"2016 டிசம்பர் 5 இன் சந்தேகங்கள்" என்ற
புத்தகம் வெளியீட்டு விழா, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தினகரன் ஆதரவாளர் புகழேந்தி, உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த புகழேந்தி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆணையம், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை விசாரணைக்கு அழைக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார். ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக இன்னும் 3 சிடிக்கள் இருப்பதாகவும், அவை விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.